அடித்தால் திருப்பி அடிக்கனும்,
நீ திருப்பி அடிக்காதவரை,
அடித்துக்கொண்டுதான் இருப்பான்.
எங்களை முடிவு பன்றதற்கு நீ யாருடா?
எம் மக்களை இழிவு படுத்துவதற்கும் ,
ஒடுக்குவதற்கும்
யாருடா
உனக்கு அதிகாரம் கொடுத்தது?
வாய்ச்சவடால் விட்டு,
எங்களை அச்சுறுத்தமுடியாது.
குரைக்கும் நாயை கண்டு நாம் அஞ்சி ஓடினால்,
அது நம்மை துரத்தும்,
எதிர்த்து நின்றால் மிரண்டு ஓடிவிடும்.
யாருக்காகவும் பின் வாங்கவேண்டாம்,
யாருக்காகவும் தயங்கவேண்டாம்,
யாருக்காகவும் அஞ்சவேண்டாம்,
இந்த அரைவேக்காட்டுக்கெல்லாம்,
அஞ்சவே வேண்டாம்..
ஏன் இந்த நிலைக்கு ஆளாக்கப்பட்டு இருக்கிறோம்,
என்று நாம் சிந்திக்கவேண்டும்
இந்த நிலை விதி என்று கடந்து போகக்கூடாது,
உழைத்தால், சிந்தித்தால் இந்நிலை மாறும்..
தலைநிமிர்வை பரிசளித்த
அறிவுத்தந்தைக்கு
புகழ்வணக்கம்.
அறிவுத்தந்தை அண்ணல் இயற்றிய சட்டம்,
எங்களின்
சமத்துவம், மனித உரிமை, ஜனநாயகம்,
எவனும் கொடுக்கவில்லை
என்பதற்காக அவனிடம் கெஞ்சாதே!!
அவனுக்கு
அச்சத்தை தரும் சட்டம் நம்மிடம் இருக்கிறது மறவாதே !!!
Read By. M.ஜெயக்குமார்,
விடுதலைக்குரல் இதழ் ரிப்போட்டர்,
Mobile:
94436 63794
.jpg)

No comments:
Post a Comment